டிக்டாக் செயலியைத் தடை செய்யக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து மாற்றி விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
டிக்டாக் செயலியால் கலாச்சார சீர்கேடுகள், விபரீதங்கள் நடப்பதாகக் கூறி அதைத் தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் டிக் டாக் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
தலைமை நீதிபதி தலைமையிலான இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அனைத்து பிரச்சனையும் சென்னை உயர்நீதிமன்றமே சிறப்பாக விசாரிக்கும் என்பதால் மனு தொடர்பாக விசாரணை நடத்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு மறுத்துவிட்டது. இதையடுத்து மனுதாரர் தனது மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
