உதகை -கேத்தி ரயில் நிலையம் இடையே இன்று முதல் சிறப்பு மலைரயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய ரயில்வே அதிகாரிகள் சுற்றுலாப்பயணிகளிடம் கிடைத்துள்ள அமோக வரவேற்பு காரணமாக ஊட்டி -கேத்தி இடையே மீண்டும் சிறப்பு ரயில் சேவை இன்று முதல் துவக்குகிறது. வாரயிறுதி நாட்களில் ஊட்டி- கேத்தி இடையே மூன்று முறை இந்த சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என்றும் உதகையிலிருந்து காலை 9.40, 11.30 மற்றும் மாலை 3 மணிக்கு என இந்த ரயில் இயக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
146 இருக்கைகள் கொண்ட நான்கு பெட்டிகளில் முதல் வகுப்புக்கு 32 இருக்கைகளும், இரண்டாம் வகுப்பில் 114 இருக்கைகளும் உள்ளன. முதல் வகுப்புக்கு 400 ரூபாயும், இரண்டாம் வகுப்புக்கு 300 ரூபாயும் பயணக் கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.
ரயிலில் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் தலா 100 ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் வழங்கப்படும்’ என்று கூறிய அதிகாரிகள், சுற்றுலா பயணிகள் உதகை ரயில் நிலையத்தில் பயணம் செய்யும் நாளன்று பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.
