காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ,35 ஏ ஆகியவை நீக்கப்பட்ட பிறகு ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான கோரிய நிலையில் ஆலோசனை மட்டும் நடத்தலாம் என்று ஐநா.பாதுகாப்பு கவுன்சில் அனுமதித்துள்ளது.
இன்று மூடிய கதவுகளின் உள்ளே தகவல் பரிமாற்றம், ஆலோசனைக்கு மட்டும் பாகிஸ்தானுக்கு அனுமதி கிடைத்துள்ளது. வெளிப்படையான விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று கோரிய பாகிஸ்தானுக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது.
15 உறுப்பு நாடுகளில் சீனாவைத் தவிர இதர நாடுகள் பாகிஸ்தானின் கோரிக்கையில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் சீனாவுக்கும் எந்த ஒரு நாட்டின் ஆதரவும் கிடைக்கவில்லை. சீனாவும் பல்வேறு பிரச்சினைகளை விவாதிக்கும் போது இந்தப் பிரச்சினையையும் விவாதிக்கலாம் என்ற அளவுக்குதான் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கிறது.
