கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாடு மலைதாண்டும் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
ஆர்.டி. மலை ஊராட்சிக்கு உட்பட்ட வாளியம்பட்டியில் உள்ள “காம தாத்தயன்” தெய்வத்திற்கு மாடு மாலை தாண்டும் திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 16 மந்தையைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கோவில் மாடுகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு மந்தையைச் சேர்ந்த மாடுகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
129 மாடுகள் ஆர்சம்பட்டி பிரிவு ரோட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட மாடுகளை விழா குழுவினர் விரட்டிச் சென்றனர். கோவில் அருகில் வேட்டியை தாண்டிச் சென்ற மாடுகள் மலை தாண்டியதாக அறிவிக்கப்பட்டது. இந்த விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
