சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் முதல் தெற்கு ஆந்திரா வரை, காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுவதால் உள் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
