பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான விவாத்தில் பேசிய தமிமுன் அன்சாரி, பள்ளி கல்லூரி மாணவர்களை அதிகமாக பாதிக்கும் டிக் டாக் செயலி தடை செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன், டிக் டாக் உள்ளிட்ட எந்த ஒரு செயலியை நீக்குவதாக இருந்தாலும், அதை மத்திய அரசு தான் செய்ய வேண்டும்.
அதேநேரத்தில், தமிழகத்தில் சர்ச்சைக்குறிய டிக் டாக் வீடியோக்களை கண்காணிக்க தனி அதிகாரி நியமித்துள்ளதாகவும், அவரின் மூலமாகக் இந்த செயலி குறித்து இரண்டு முறை மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டதாகவும் கூறினார்.
கடந்த ஏப்ரல் 22ம் தேதி மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்துக்கு இன்னும் பதில் வரவில்லை என்றும் அமைச்சர் மணிகண்டன் கூறினார்.
மேலும், குதித்தல், டைவ் அடித்தல் போன்ற சாகச வீடியோக்களை டிக் டாக்கில் பதிவு செய்ய முயற்சித்து பல்வேறு இறப்புகள் நிகழ்ந்துள்ளன. எனவே கண்டிப்பாக தமிழகத்தில் டிக் டாக் செயலி தடை செய்யப்படும் என்று அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.
