மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயார்களுடன் இன்று காலை மகாரத தேரில் 4 மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
ரத உற்சவத்தின் போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று இரவு தங்க குதிரையில் கல்கி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.
