இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் ஒன்று பயிற்சியின் போது கீழே விழுந்து நொறுங்கியது.
அஸ்ஸாம் மாநிலத்தின் தேஸ்பூர் என்ற இடத்தில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான எஸ்யூ 30 என்ற ரகத்தை சேர்ந்த போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது விமானிகளிடமிருந்து கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையை நோக்கிப் பாய்ந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானத்தின் விமானியும், துணை விமானியும் அவசரகால பாராசூட் வழியாக கீழே குதித்தனர்.
அதன்பின்னர் சில நொடிகளில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
