டெல்லி : ஜெயலலிதா இறந்தது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்ய கோரி விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா இறந்து விட்டதால் வழக்குகளை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றத்தில் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
