உலக பேட்மிண்டன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த பி.வி. சிந்து டெல்லி திரும்பினார்.
அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.25வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்விட்சர்லாந்தில் உள்ள பாசெல் நகரில் நடைபெற்றது.
இதில் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை நஜோமி ஓகுஹராவுடன் மோதிய பி.வி.சிந்து தொடக்கம் முதலே வெற்றிகளைக் குவிக்கலானார். இறுதியாக 21-க்கு 7 , 21க்கு7 என இரு சுற்றுகளிலும் வாகை சூடிய சிந்து 38 நிமிடங்களில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பி,வி.சிந்து இந்தியராக இருப்பதால் பெருமைப்படுவதாக தெரிவித்தார். மேலும் பல பதக்கங்களை வெல்வேன் என்றும் பி.வி.சிந்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
