நடப்பு நிதியாண்டில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது குறைக்கப்பட்டுள்ளது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்த போது அதற்கு ஈடுசெய்யும் வகையில் ரிசர்வ் வங்கி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்து புழக்கத்தில் விட்டது. பின்னர் சில்லரைத் தட்டுப்பாடு காரணமாக புதிதாக 500 ரூபாய் நோட்டுகளும் 200 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்திற்கு விடப்பட்டன. ஆனால் தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது குறைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் ரிசர்வ் வங்கியால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
