சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்த அவர், இருநாட்டு தலைவர்கள் வருகைக்கு பிறகு சென்னையும் மாமல்லபுரமும் அதி முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாறும் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்துக்கு கிடைக்கும் இந்த கவுரவத்தை கட்சி பாகுபாடின்றி அனைவரும் வரவேற்க வேண்டும் என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பேனர் வைக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது குறித்த கேள்விக்கு அரசு சார்ந்த நிகழ்ச்சிக்கு பேனர் வைக்க நீதிமன்றம் கொடுத்த அனுமதியை அரசியல் ஆக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு தவறான தகவல்களை கொடுப்பது குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அதை தவிர்க்க வேண்டும் என்றும் பொன் ராதாகிருஷ்ணன் பதிலளித்தார்.
