ப்ரயாக்ராஜ் (முந்தைய அலஹாபாத்): இங்கே ஆண்டுக்கு ஒரு முறை முக்கடல் சங்கமம் கும்ப மேலாவாக கொண்டாடப்படுகின்றது.
ப்ரயாக்ராஜ் பற்றிய அணைத்து விபரங்களையும் மிக அற்புதமாக பிரெக்ஸா மூவிஸ் நிறுவனம் ஆவணப்படம் செய்துள்ளனர்.
திரிவேணி சங்கமம் எனும் வடமொழிச் சொல்லுக்கு மூன்று ஆறுகள் கூடுமிடம் என்று பொருள்.
அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் எனுமிடத்தில் கங்கை, யமுனை ஆறுகளுடன் கட்புலனாகாத சரசுவதி ஆறும் வந்து கலப்பதாக நம்பப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த இடத்தில் கும்பமேளா நிகழ்த்தப்படுகிறது. மகாத்மா காந்தி உட்படப் பல இந்தியத் தலைவர்களின் அஸ்தி இங்கு கரைக்கப்பட்டுள்ளது.
அணைத்து மக்களும் பார்க்க வேண்டிய ஒன்றாக இப்படம் அமைந்துள்ளது என பல ஹிந்து துறவிகள் பாராட்டியுள்ளார்.
“இதில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும்,மேலும் இப்படி ஒரு படத்தைத் தயாரித்ததில் தமக்கு பெரும் மகிழ்ச்சி” எனவும் பிரெக்ஸா மூவிஸின் நிர்வாக இயக்குனர் திரு.சுரேஷ் நாராயணன் தெரிவித்தார்.
வரும் பிப்ரவரி 9ஆம் தேதி, ப்ரயாக்ராஜ் நகர கும்ப மேளா நடக்கும் இடத்திலேயே இப்படத்தின் ஆவணப்பட வெளியீட்டு விழா நடக்கவுள்ளது.
