பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது, 22ம் தேதி ஹூஸ்டனில் நடைபெறும் ஹவுடி மோடி என்ற நிகழ்ச்சியில் எதிர்பாராத விருந்தினராக அதிபர் டிரம்ப் பங்கேற்க இருப்பதை வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமெரிக்காவுக்கான இந்திய தூதரக அதிகாரி ஹர்ஷ் வரதன் சிருங்கலா, இரு தலைவர்களும் ஒரே மேடையில் சந்திக்க இருப்பது இருவரிடையே உள்ள நெருக்கமான தனிப்பட்ட நட்பையும் இருநாடுகளுக்கு இடையிலான இணக்கமான சூழலையும் வெளிப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.
தனித்துவம் வாய்ந்த சந்திப்பாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்த அவர், வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த எதிர்பாராத சந்திப்பு இருநாடுகளுக்கும் பலவித பயன்களை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
