பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சொந்த செலவில் ஊரில் உள்ள குளம், ஏரி மற்றும் வாய்க்கால்களை தூர்வாரி வருகின்றனர்.
பனங்கூரில் 1 ஏக்கர் பரப்பளவில் உள்ள நல்ல தண்ணீர் குளம், ஏரி மற்றும் இதற்கான வரத்து வாய்க்கால்களில் முட்புதர்கள் அதிகளவில் மண்டி காணப்பட்டன.
இதனால் மழை பெய்தால் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்படும் என கருதிய ஊர் பொதுமக்கள், அனைவரும் ஒருங்கிணைந்து தங்களால் முடிந்த நிதியை வழங்கி குறிப்பிட்ட தொகையை சேர்ந்துள்ளனர்.
வெளிநாட்டில் வேலை செய்து வரும் பனங்கூரை சேர்ந்த சிலரும் தாமாக முன் வந்து நிதியை வழங்கியுள்ளனர். அவற்றின் மூலம் மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற்று குளம், ஏரி மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன.
