நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணப்பரிமாற்றம் நடைபெற வாய்ப்பு கிடையாது என்றும் பணம் கேட்டால் விவசாயிகள் கொடுக்க வேண்டாம் என்றும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கேட்டுக்கொண்டார்.
நாகை மாவட்டம் பொறையாறில் கடந்த ஆண்டு நிகழ்ந்த பேருந்து பணிமனை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணிக்கான ஆணைகளை வழங்கியபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இவ்வாறு கூறினார்.
