காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதரை, நான்கு நாட்களில் சுமார் 3 லட்சத்து 45 பேர் தரிசனம் செய்துள்ளனர்.
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அத்திவரதர் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருகிறனர்.
நான்காம் நாளான இன்று மட்டும் சுமார் 45 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 500 ரூபாய் கட்டணத்தில் சுமார் 1000 பேர் தரிசனம் செய்தனர்.
வருகிற 11 ஆம் தேதி வரை வரதராஜ பெருமாள் கோவிலில், வசந்த உற்சவம் நிகழ்வு நடைபெறுவதால், காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அத்திவரதரை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.
