திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன், திமுக எம்.பி. கனிமொழி ஆலோசனை மேற்கொண்டார். 3 மணி நேரங்களுக்கு மேலாக நீடித்த பேச்சுவார்த்தையின் இறுதியில், நாங்கள் எதிர்பார்த்த தொகுதிகள் எங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
