இலங்கை அதிபர் தேர்தலுக்கு தமது சகோதரர் கோத்தபயா போட்டியிடுவதாக முன்னாள் அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளார்.
கொழும்புவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமது சகோதரருடன் பங்கேற்ற ராஜபக்சே, இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் அதிபர் தேர்தலில் தமது சகோதரர் கோத்தபயா போட்டியிட உள்ளதாக தெரிவித்தார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், சிறிசேனாவின் ஆதரவும் ராஜபக்சே அணிக்கே இருப்பதாக கருதப்படுகிறது. உள்நாட்டு போரை முடிவுக்குக் கொண்டு வந்ததில் பெரும்பங்கு வகித்த கோத்தபயா, அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்ததற்கு காரணமானவர் என்ற சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.
கோத்தபயா அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்ட இலங்கையின் நிதியமைச்சர் மங்கள சமரவீரா, காட்டுமிராண்டிகள் மீண்டும் வந்துவிட்டார்கள் என்றும், வெள்ளை வேன் வன்முறைக் குற்றங்கள் மறுபடியும் நிகழ அனுமதிக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
