அனைத்து கடன்களையும் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக காபிடே நிறுவனம் தெரிவித்துள்ளது.
காபிடே அதிபர் வி.ஜே.சித்தார்த்தா கடந்த ஜூலை 31ம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூரில் தற்கொலை செய்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதையடுத்து, அந்நிறுவனத்தின் மீதான 4 ஆயிரத்து 970 கோடி ரூபாய் கடன் சுமை வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த கடன் அனைத்தையும் தீர்ப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காபி டே நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். ஏற்கனவே குளோபல் வில்லேஜ் உள்ளிட்ட சொத்துகளை விற்பதற்கு இந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதில் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காஃபிடே மீதான கடன் சுமை கணிசமான அளவுக்கு குறையும் என்றுகூறப்படுகிறது. வருமான வரித்துறை அதிகாரிகளின் தொல்லையாலும் கடன் சுமையாலும் தான் சித்தார்த்தா விபரீத முடிவை எட்டியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
