ராணுவ வீரர்கள் பாலியல் ரீதியான தவறுகளை செய்யும்போது அவர்களை தண்டிப்பதற்கு ராணுவத்திற்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் திருமணமான ஒருவர் முறைகேடான உறவு வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில், 158 ஆண்டுகளாக சட்டப்பிரிவு 497 ல் இருந்த தண்டனையை உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ரத்து செய்வதாக அறிவித்தது. கணவருக்குத் தெரியாமல் மனைவியோ மனைவிக்குத் தெரியாமல் கணவரோ முறைதவறிய உறவு வைத்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டியதில்லை என்று தெரிவித்த உச்சநீதிமன்றம் கள்ளத் தொடர்பை விவாகரத்துக்கான காரணமாக ஏற்கலாம் என்று தெரிவித்தது.
கர்னல் ஒருவர் இரண்டு உயரதிகாரிகளின் மனைவிகளுடன் தொடர்பு வைத்திருந்ததற்காக ராணுவம் நடவடிக்கை எடுத்திருந்தது. இந்த நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி கர்னல் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பின் அடிப்படையில் ராணுவம் கர்னலை தண்டிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
