டெல்லி: இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை பத்திரமாக இந்தியாவிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அபிநந்தனை ஒப்படைக்குமாரு நேற்று இந்தியாவிலுள்ள பாகிஸ்தான் துணை தூதரிடம் வெளியுறவுத்துறை வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் மாலை 6.30 மணிக்கு பிரதமர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு கட்சி தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
