தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை இன்றும் சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து பல்வேறு புதிய உச்சங்களை எட்டி வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை இன்றும் சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 29 ஆயிரத்து 816 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் 14 ரூபாய் உயர்ந்து மூவாயிரத்து 727 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்துள்ளன. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 52 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 300 ரூபாய் உயர்ந்து 52 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை 30 ஆயிரம் ரூபாயை நெருங்கி விற்பனையாவதால் ஏழை மற்றும் நடுத்தரமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
