விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக தேவைப்படும் 615 ஏக்கர் நிலமும் ஒப்படைக்கப்பட்ட பின்னரே விரிவாக்கப் பணிகள் துவங்கும் என மதுரை விமான நிலைய இயக்குனர் வி வி ராவ் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதிலளித்த அவர், மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு 615 ஏக்கர் நிலம் தேவைப்படும் நிலையில், தமிழக அரசு கட்டுப்பாட்டிலுள்ள 60 ஏக்கர் நிலம் மட்டுமே இதுவரை ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நிலம் கையகப்படுத்தப்படவுள்ள பகுதிக்குள் நான்கு வழிச்சாலை அமைந்துள்ளதால் அதற்கான போக்குவரத்து மாற்று ஏற்பாடுகள் செய்யப்படவேண்டியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
