துர்காஷ்டமியை முன்னிட்டு குஜராத் மாநிலம் சூரத் நகரில் உமைய்யா தாம் கோவிலில் நடைபெற்ற வண்ணமிகு மகா ஆரத்தி வழிபாட்டில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் 4 கிலோ தங்கம் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் மற்றும் நாணயங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது
கொல்கத்தாவில் துர்கா பூஜையை முன்னிட்டு பாலக்கோட் விமானத் தாக்குதல் மற்றும் அபிநந்தனை நினைவு கூரும் வகையில் பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
கொல்கத்தாவின் ஹரிதேவ் பூரில் துர்காபூஜை பந்தலில் பல்வேறு காலகட்டங்களில் செய்திகள் அனுப்பப்பட்டது தொடர்பான தகவல் தொழில் நுட்ப முறைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மணிப்பூர் மாநிலம் இம்பாலில் துர்கா பூஜை சிறப்பு பஜனையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
குஜராத் மாநிலம் பரூச்சில் ராஜபுத்திர சமூகத்தினர் வாள் நடனம் ஆடினர்
டெல்லி சித்தரஞ்சன் பூங்காவில் துர்காஷ்டமி சிறப்பு வழிபாடுகள் ஆடல் – பாடல் நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றன.
டெல்லி ஜந்தேவாலன் கோவிலில் துர்காஷ்டமியை முன்னிட்டு சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது
அமிதாப்பச்சன் குடும்பத்தினர் சார்பிலான துர்காபூஜை விழாவில் நடிகை கஜோல் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்
வடக்கு மும்பையில் துர்காஷ்டமியை முன்னிட்டு பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்ட நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்துகொண்டார்.
துர்காஷ்டமியை முன்னிட்டு கொல்கத்தாவில் திரினாமூல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான் தனது குடும்பத்தினருடன் வாத்தியங்களை இசைத்து நடனமாடிக் கொண்டாடினார்
