அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் எஸ் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் தங்கபாலு ,ஈ.வி.கேஎஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர் ,முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ,தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோர் ராகுல்காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு மேலாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் முகாமிட்டு தி.மு.க.வுடன் ஆலோசனை நடத்தி வந்தனர்.
தற்பொழுது இந்த தொகுதி உடன்பாடு எளிதாக தெரிகிறது தி.மு.க கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வரை தற்பொழுது கொடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, இது சம்பந்தமாக தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தற்பொழுது ராகுல்காந்தியுடன் அவருடைய இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர், இதற்கான இறுதி அறிவிப்பு நாளை சென்னையில் வெளியாகிறது.
