வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய அளவில் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
பொதுத்துறை வங்கிகள் இணைப்பு மற்றும் சீரமைப்பைக் கைவிட வேண்டும், வாராக் கடனை தீவிரமாக வசூலிப்பதோடு, கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அபராதக் கட்டணம் என்ற பெயரில் வாடிக்கையாளர்களை துன்புறுத்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மத்திய அரசு தலைமை தொழிலாளர் நல ஆணையர், இந்திய வங்கிகள் சங்க நிர்வாகிகள், மத்திய நிதியமைச்சக அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்ற கூட்டம் தோல்வியில் முடிந்ததால் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. தமிழகத்தில் 35 ஆயிரம் பேர் உள்பட அகில இந்திய அளவில் 3 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்பதால், வங்கி சேவைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
