ஜம்மு – காஷ்மீரை சேர்ந்த, 575 பேர் வெற்றிகரமாக பயிற்சி முடித்து இன்று முதல் ராணுவத்தில் இணைந்தனர்.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து 2 யூனியன் பிரதேசங்களாக அறிவித்ததற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த மாநில மக்கள் இதை விரும்பவில்லை என அரசியல் கட்சி தலைவர்கள் கருது தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் எதிர் கட்சியினரின் கருத்துக்களை பொய்யாக்கும் வகையில் அதே மாநிலத்தை சேர்ந்த 575 பேர் இந்திய ராணுவத்தில் சேர்வதற்கான பயிற்சி முகாமில் வெற்றிகரமாக பயிற்சி முடித்து இன்று முதல் ராணுவத்தில் இணைந்தனர்.
நாட்டை காக்கும் பணியில் இணைந்திருப்பது மிகவும் பெருமை அளிப்பதாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
