தமிழகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத 700 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
சென்னை, கோவை, தஞ்சை, காரைக்கால் உள்ளிட்ட 55 இடங்களில் கடந்த 6ந் தேதி நடைபெற்ற சோதனையின்போது 4 கோடியே 50 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் காரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மதுபான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், அந்த நிறுவனத்தில் மூலப்பொருட்கள் வாங்கியதற்கான கணக்கில் குளறுபடி செய்து ரூபாய் 400 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
மற்றொரு மதுபான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
