கோவை : காவிரிக் கரையோரங்களில் முதற்கட்டமாக 73 கோடி மரக்கன்றுகள் நட்டு, காவிரிநதியை பாதுகாக்கும் விழிப்புணர்வு பேரணியை கோவையில் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் துவக்கி வைத்தார்.காவிரி கூக்குரல் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி சிவன் சிலை முன்பு இன்று (ஜூலை 31) இந்த விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. ‘காவிரி கூக்குரல்’ என்ற பெயரில், வேளாண் காடுகள் வளர்ப்பின் மூலம் காவிரி நதியை பாதுகாக்க முதற்கட்டமாக, காவிரி நதியின் கரையோரங்களில் 73 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு இந்த இயக்கம் திட்டமிட்டுள்ளது. விழிப்புணர்வு தன்னார்வலர்கள் இந்த நிகழ்ச்சியில், பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், நடிகை ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழிப்புணர்வுக்கு வாகனங்களில் ஏராளமான தன்னார்வலர்கள் புறப்பட்டுள்ளனர்.
