மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் தென்காசி, செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களை சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார். இதனிடையே கடந்த 24 ஆண்டுகளாக மயிலாடுதுறை கோட்டத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்று கூறி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோயில், தரங்கம்பாடி பகுதிகளில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சீர்காழி பகுதியில் மட்டும் கடையடைப்பு நாளை நடைபெறும் என அறிவிக்கப்படுள்ளது.
