காஞ்சிபுரம் அத்திவரதர் திருவிழாவையொட்டி உள்ளூர் வாகனங்களுக்கு கார் பாஸ் பெற ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரிசையில் காத்திருந்தனர்.
ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கும் வரதராஜ பெருமாள் கோவில் அத்திவரதர் திருவிழவையொட்டி வெளியூர் வாகனங்கள் ஊருக்குள் நுழைய அனுமதியில்லை என்பதால் உள்ளூர் வாகனங்கள் பாஸ் இருந்தால் மட்டுமே காஞ்சிபுரத்திற்குள் அனுமதிக்கப்படும்.
அந்த பாஸ்களை இன்று முதல் ஜூலை 1-ஆம் தேதிக்குள் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்து இருந்தார். இந்நிலையில் காலை 8 மணி முதலே ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மைதானத்தில் நீண்ட வரிசையில் கார்களுக்கான பாஸ் பெற காத்திருந்தனர். ஆதார், இன்சூரன்ஸ், ஆர்சி புக் ஆகியவற்றில் ஏதாவது ஒரு அசல் சான்றின் பேரில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கார் பாஸ் வழங்கி வருகிறார்கள்.
