14 வகையான பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையையும் மீறி பிளாஸ்டிக்கை பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை இன்று அமலுக்கு வந்தது. அதன்படி பிளாஸ்டிக் பொருட்களை விற்பது, சேமித்து வைப்பது, பிற இடங்களுக்கு கொண்டு செல்வது ஆகிய செயல்களில் ஈடுபட்டால் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
சூப்பர் மார்க்கெட், வணிக வளாகங்கள், துணிக் கடைகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரையும், நடுத்தர நிறுவனங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரையும், சிறு வியாபாரிகளுக்கு 500 ரூபாய் வரையும் அபராதம் விதிக்கப்படும். நான்காவது முறை சிக்கும் பட்சத்தில் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
