இந்தியா- சவுதி அரேபியா இடையே இன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான், இரண்டு நாள் அரசுமுறை பயணமாக நேற்று டெல்லி வந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மோடி அவரை நேரில் வரவேற்றார்.
குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோரை சந்திக்கும் இளவரசர் சல்மான், பிரதமர் மோடியுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட உள்ளது. பல்வேறு துறைகளில் சவுதி அரேபிய முதலீடு குறித்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
