கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் காவிரி நீர் 8 ஆயிரத்து 300 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் குடகு உள்ளிட்ட காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.மேலும் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் நீர்திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 4 ஆயிரத்து 800 கன அடியும், கபினி அணையிலிருந்து 3 ஆயிரத்து 500 கன அடியும் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து மழை நீடித்து வருவதால் காவிரியில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
