விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.
விக்கிரவாண்டியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட காணை ஒன்றிய செயலாளர் எம்.ஆர். முத்தமிழ் செல்வனும், நாங்குநேரியில் நெல்லை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ரெட்டியார்பட்டி வெ நாராயணனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
விக்கிரவாண்டியில் திமுக சார்பில் புகழேந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 21ஆம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்குநேரி தொகுதிக்கான வேட்பாளரை காங்கிரஸ் தற்போது வரை அறிவிக்கவில்லை.
