நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் தொடர்ந்து அரங்கேறி வரும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் கொல்லிமலையில் ஏராளமான மூலிகைகளும் கனிம வளங்களும் காணப்படுகின்றன.
அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் வனத்துறைக்குச் சொந்தமான இடங்களில் காணப்படும் இந்தக் கனிம வளங்கள் தொடர்ந்து வெட்டி எடுக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த நிலை தொடர்ந்தால் நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்பு உருவாகும் என்றும் கொல்லிமலையின் இயற்கை அழகு சிதையும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் நேரில் பார்வையிட்டு நிரந்தரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
