தமிழக அரசின் சின்னமாக ‘தமிழ் மறவன்’ பட்டாம்பூச்சி இனத்தை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், தலைமை வன உயிரின பாதுகாவலர் பரிந்துரையை ஏற்று இதுதொடர்பான அரசாணையை அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதையடுத்து, தமிழக அரசின் சின்னமாக ‘தமிழ் மறவன்’ பட்டாம்பூச்சியை சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை சேர்த்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம், பனைமரம், மரகதப்புறா, வரையாடு உள்ளிட்டவை அரசின் சின்னங்களாக ஏற்கெனவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
