டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதிய உணவிற்காக அறையை விட்டு வெளியேறும் போது அவர் மீது மிளகாய் பொடி வீசப்பட்டுள்ளது.
முதல்வர் மீது மிளகாய் பொடி வீசிய நபர் அனில் குமார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் ராகவ் சந்திரா கூறியதாவது, இந்த சம்பவம் நடக்கும் போது முதல்வருடன் நானும் இருந்தேன். டெல்லியில் முதல்வருக்கே பாதுகாப்பு இல்லை என்றார். ஆம் ஆத்மி கட்சி இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பு குறைப்பாடு இதற்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளனர்.
ஏற்கனவே, அரவிந்த் கெஜ்ரிவால் மீது மை வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
