சட்டப்பேரவை வரும் 28ஆம் தேதி கூடும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சட்டப்பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது மற்றும் அந்த நாட்களுக்கான அலுவல்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் தனபால், ஜூன் 28ஆம் தேதி தொடங்கி ஜூலை 30ஆம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும் என்றார். விடுமுறை நாட்கள் போக மொத்தம் 23 நாட்களுக்கு கூட்டத் தொடர் நடைபெறும் என்றும், எல்லா நாட்களும் கேள்வி நேரம் இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.
துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் எடுத்துக்கொள்ளப்படும் நாட்களையும் அவர் பட்டியலிட்டார். தமக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1ஆம் தேதி எடுத்துக் கொள்ளப்படுமா என்பது அன்றைய அஜெண்டாவில் தெரிவிக்கப்படும் என்றும் சபாநாயகர் தனபால் பதிலளித்தார்.
