பெர்ன்: சுவிஸ் வங்கிகளில், 2018ல், இந்தியாவில் இருந்து முறையாக முதலீடு செய்யப்பட்ட தொகை, 6 சதவீதம் சரிந்துள்ளதாக, அந்நாட்டு வங்கிகளின் ஆண்டறிக்கை தெரிவிக்கிறது. அறிக்கை ஐரோப்பிய நாடான, சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில், கடந்த ஆண்டு முறையாக செய்யப்பட்ட முதலீடுகள் குறித்து, அந்நாட்டின் மத்திய வங்கிகள் ஆணையம், அறிக்கை வெளியிட்டுஉள்ளது.அதில், உலகம் முழுவதிலும் இருந்து, 2018ல், சுவிஸ் வங்கிகளில், 99 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டதாகவும், இது, வழக்கத்தை விட, 4 சதவீதம் சரிந்துஉள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்தியாவில் உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களில் இருந்து, நேரடியாக சுவிஸ் நாட்டு வங்கியிலும், இந்தியாவில் கிளைகளை உடைய மற்ற வங்கிகளிலும், 6,757 கோடி ரூபாய், 2018ல் முதலீடு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. புள்ளிவிபரம் இது, 6 சதவீதம் குறைவு என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த, 20 ஆண்டுகளில், இரண்டாம் முறையாக, இப்படியொரு சரிவு ஏற்படுவதாக, அந்த புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
