சர்வதேச யோகா தினத்தை அனைத்து பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளும், கடைபிடிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. ஆண்டுதோறும் சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு யோகாதினத்தை கொண்டாட கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களுக்கு, பல்கலைக்கழக மானியக்குழு சில உத்தரவுகளை பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் வருகிற 21-ம் தேதி காலை 7 மணி முதல் 8 மணி வரை அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் யோகாசனம் செய்து யோகா தினத்தை கொண்டாட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
