துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் இன்று விசாரணை தொடங்குகிறது.
கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி டி.டி.வி. தினகரன் தரப்பு மற்றும் தி.மு.க. கொறடா சக்கரபாணி சார்பில் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனை அடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன் ஆஜரான திமுக தரப்பிலான வழக்கறிஞர் கபில்சிபல், 11 எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றார். இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி , வழக்கு விசாரணைக்கு ஏற்கப்படும் என்றார். இதனையடுத்து வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
