மும்பை விமான நிலையத்தில் ஓடுதளத்தில் சிக்கியிருந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் மீட்கப்பட்டுள்ளது. அந்த விமானம் தரையிறங்கும் போது கனமழை காரணமாக ஓடுதளத்தை விட்டு விலகியது. எனினும் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உள்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விமானம் சறுக்கியபடி சென்றதால் ஓடுதளத்திற்குள் அதன் சக்கரங்கள் புதைந்து சிக்கிக் கொண்டன. இதையடுத்து முதன்மை ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டு, இரண்டாவது ஓடுதளத்தில் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.
ஓடுதளத்தில் சிக்கியிருந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தை மீட்கும் பணி கடந்த இரு தினங்களாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று இரவு மீட்பு பணி நிறைவடைந்ததாக மும்பை விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
