கோவையில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் உயிரிந்தந்த சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வடிவேல்ராஜன். இவரது மனைவி பேபி(22). இவர், கடந்த 17 ம் தேதி காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. சிகிச்சை பலனின்றி நேற்று இரவு(நவ.19) உயிரிழந்தார். இதேபோல், பொள்ளாச்சி பழனிகவுண்டபுதூர் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி வீரம்மாள்(50). இவரும் கடந்த 18 ம் தேதி முதல் பன்றிக்காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்தார்.கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில், பன்றிக்காய்ச்சல், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர்.